Posts

Showing posts from December, 2025

உண்மையில் யார் குற்றவாளி?

எந்த கோணத்தில் அல்லது எந்த வடிவத்தில் வன்முறை நிகழ்ந்தாலும் வன்முறையை பற்றிய கருத்துகளையோ, அது சார்ந்த பாதிப்பு குறித்தோ பேசுவதற்குள், எப்படியாவது ஒரு வகையில் ஒடுக்கப்பட்டவர்களின் மீதான வன்மம் பரவத் துவங்கி குற்றங்கள் திசை திருப்பப்படுகிறது.  உதாரணத்திற்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி இருந்தால், செய்தி பரவிய சில மணித்துளிகளிலேயே விவாதங்கள் தொடங்கிவிடும். குற்றவாளி யார்? குற்றங்கள் குறைக்க என்ன வழி? இதிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் எப்படி மீண்டு வருவது? அரசின் தவறு, கடமைகள் என்ன? என இப்படியெல்லாம் அந்த விவாதங்கள் இருக்காது. இவற்றை பேச வேண்டிய தேவை உள்ளவர்களும் கட்டாயத்தின் பேரில் கலாச்சார காவலர்களின் அவதூறுகளுக்கு பதிலளித்துக் கொண்டிருக்க வேண்டும். அவள் அந்த உடை போட்டிருக்க கூடாது - இல்லை அது அவளது உரிமை.  அந்த நேரத்தில் அங்கு சென்றிருக்கக் கூடாது - குற்றவாளிகள் மட்டும் செல்லலாமா?  அந்த பொண்ணு NO சொல்லி இருக்கனும் - அந்த பொண்ணு YES சொல்லவில்லை. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது திருத்தணி அருகே ரயிலில் வடமாநில தொழிலாளி ஒருவரை நான்கு சிறார்கள் அரிவாளால் தாக்க...