Posts

பயணம் பயமுறுத்துகிறது...

பயணம் பயமுறுத்துகிறது... பயணம்... வாழ்க்கையில ரொம்ப பிடிச்ச ஒன்னு. நிறைய சம்பாதிக்கனும், நிறைய ஊர் சுத்தனும். இதழியல் படிச்சு அதுல ரிப்போர்ட்டர்-ஆ போனா நிறைய இடங்களுக்கு போகலாம், ஒக்காந்த இடத்துல இருந்தே வேல செய்யத் தேவையில்ல. இப்படி என்னோட தொழிலும் பயணம் சார்ந்து தான் இருக்கனும்-ன்னு 3,4 வருசத்துக்கு முன்னாடியே ஆசபட்டேன். இன்னிக்கும் அந்த ஆசை எல்லாம் இருக்கு. ஆனால், எனதருமை ஆண்களே... எதிர்பார்ப்பதைப் போல குறிப்பாக பெண்களுக்கு அவ்வளவு அழகியல் கொண்டதல்ல பயணம் . அது ஒரு அருவெறுப்பு, கண்ணீர், வேதனை, விவரிக்க முடியாத வலி, மீள முடியாத இறுக்கம், கண்ணுக்குப் புலப்படாத பயம்.  என்னைவிட யாரும் என்னை அதிகம் காதலித்துவிட முடியாது என்னும் கர்வம் கொண்டவள் நான். நான் அறிந்த தைரியமான பெண்களில் நானும் ஒருத்தி. இந்த தைரியத்தை நீண்ட காலம் நம்பி என்னையே நான் ஏமாற்றிக் கொள்ளப் போவதில்லை.  யாருக்கு எதிராக இந்த தைரியமும் கோபமும் துணிச்சலும் இந்தளவிற்கு வலுபெற்றதோ அதே ஆண்களின் ஒரே ஒரு பார்வை போதும் என்னை வலுவற்றவளாக மாற்ற. உடைத்து சுக்குநூறாக்கி, “நீ(பெண்) என்பது இரண்டு முலைகளைக் கொண்ட வெறும் உடல் மட...

வாசிப்பின் குறிப்புகள் 3

 #3 வாசிப்பின் குறிப்புகள் மீண்டும் ஒரு கே.ஆர்.மீரா. தேவதைகளின் மச்சங்கள், கருநீலம் என இரண்டு கதைகளைக் கொண்ட ஒரு புத்தகம்.  தேவதைகளின் மச்சங்கள் - கதையை ஏற்றுக் கொள்ள நெடுநேரம் தேவைப்பட்டது. இறுதியில் ஏற்றுக்கொள்வதற்கான நியாயங்களும் இருந்தது. காதல் என்னும் பெயரால் வன்புணரப்பட்ட பெண், காமத்தின் பெயரால் இரக்கத்தோடு கலப்படமில்லா காதலை அவள் சந்தித்த ஆண்களுக்கு அள்ளி வழங்கினாள். எதார்த்தங்களால் நிறைந்த கதை.   கருநீலம் - ஏதோ புராணக் கதைகள் படிப்பதுபோல் இருந்தது. படித்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் முடித்த கதை. துளியும் கதையோடு ஒன்றிப்போக முடியவில்லை . இந்தக் கதை துவங்குவதற்கு முன்பாகவே “சதி சாவித்திரிகளும் கண்ணியமான உத்தமபுருஷர்களும் இதை வாசிக்காதீர்கள்” என்ற முற்போக்கு முன்னறிவிப்போடு சேர்த்து புராண புனைவுகளுக்கும் இதில் இடமுண்டு என்றும் சொல்லி இருக்கலாம்.

வாசிப்பின் குறிப்புகள் 2

 #2 வாசிப்பின் குறிப்புகள்  மலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீரா-வின் தமிழாக்கம் செய்யப்பட்ட “அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்” நாவல்.  பெரும் எதிர்ப்பார்ப்போடு தொடங்கிய புத்தகம். தொடக்கத்திலேயே ஒரு இறுக்கத்தை புகுத்திவிட்டது. அது இன்னும் ஆயிரம் பக்கங்கள் எழுதி இருந்தாலும் தளர்த்த முடியாத ஒரு இறுக்கம். பாலியல் ரீதியில் விருப்பம் இல்லாமல் ஒருவன் பார்க்கும் பார்வையே வாழ்நாள் முழுக்க இறுக்கத்தைத் தரும் திறன் படைத்தது அல்லவா. அது கதைகளானாலும் விதிவிலக்கல்ல.  ஒரே ஒரு உவமையை கதை முழுவதும் பயன்படுத்தி இருந்தாலும், ஒவ்வொரு இடத்திலும் கச்சிதமாக அந்த உவமை பொருத்தப்பட்டிருந்தது.  மீரா-வின் எழுத்து எத்தனை விமர்சனங்களைத் தாண்டியும் புத்தகத்திற்குள் வாசகனை இழுத்துச் செல்லும் வல்லமை கொண்டது. அது என்னை வெறுப்பு கலந்த சலிப்போடு கடைசி பக்கத்தில் கடைசி வரி வரை இழுத்துச் சென்றது. என் பொறுமையையும் பெண்மையையும் சோதனை செய்தது.  எத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் காதலின் பெயரால் ஒரு ஆணை பெண் மன்னிப்பதென்பதும் ஒரு வித அடைமைத்தனம் தானே. அந்த அடிமைத்தனத்தை காதலோடும், காமத்தோடும், சொல்லி ...

வாசிப்பின் குறிப்புகள் 1

  #1 வாசிப்பின் குறிப்புகள் இந்த ஆண்டின் முதல் புத்தகம் மாரி செல்வராஜ் அவர்களின் சிறுகதைகளான "காட்டுப்பேச்சிகளை காதலித்தவன்". மொத்தம் 5 கதைகள் கொண்ட சிறிய புத்தகம்தான். மிகச் சிறப்பாக நான் பார்ப்பது எழுத்தாளராகவும், இயக்குனராகவும் மாரி எத்தனை முறை தன்னுடைய வாழ்வியலைச் சொன்னாலும் அது எனக்கு சலிப்பதே இல்லை. இந்த புத்தகத்தில் ரொம்ப பிடித்த கதைகள் "கோழியாப்பண்ணை" மற்றும் கடைசி கதையான "முக்குளி வாத்துகளின் கதை". கோழியாப்பண்ணையில் நான் வாழ்ந்தேன் என்பதைவிட வேறு விதமாக மெச்சிக் கூறத் தெரியவில்லை. தாமிரபரணியில் என் கண்ணீரும் கலந்திருக்கக் கூடும். கடைசி கதை... காதல் யாருக்குத் தான் பிடிக்காது. அதுவும் சாதாரண காதல் அல்ல. ஆணவக்கொலை அல்லது ஊர்க்கலவரம் அல்லது காதலர்களின் தற்கொலை இப்படியான ஏதோவொரு முடிவோடு கூடிய ஒரு காதல். கொஞ்சம் விமர்சனம் எழுந்த கதை "நடுநிசி நதி". சராசரி ஆண் பார்வையில் பார்க்கப்படும் பெண்ணை, அதே பார்வையில் பார்க்கும் மற்றொரு ஆண் அதனை கவித்துவத்தோடு சொல்லி "நான் சராசரி ஆண் இல்லை" என்பதைக் கூறவரும் வகையில் எனக்கு அந்தக் கதை இருந்தது....

உண்மையில் யார் குற்றவாளி?

எந்த கோணத்தில் அல்லது எந்த வடிவத்தில் வன்முறை நிகழ்ந்தாலும் வன்முறையை பற்றிய கருத்துகளையோ, அது சார்ந்த பாதிப்பு குறித்தோ பேசுவதற்குள், எப்படியாவது ஒரு வகையில் ஒடுக்கப்பட்டவர்களின் மீதான வன்மம் பரவத் துவங்கி குற்றங்கள் திசை திருப்பப்படுகிறது.  உதாரணத்திற்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி இருந்தால், செய்தி பரவிய சில மணித்துளிகளிலேயே விவாதங்கள் தொடங்கிவிடும். குற்றவாளி யார்? குற்றங்கள் குறைக்க என்ன வழி? இதிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் எப்படி மீண்டு வருவது? அரசின் தவறு, கடமைகள் என்ன? என இப்படியெல்லாம் அந்த விவாதங்கள் இருக்காது. இவற்றை பேச வேண்டிய தேவை உள்ளவர்களும் கட்டாயத்தின் பேரில் கலாச்சார காவலர்களின் அவதூறுகளுக்கு பதிலளித்துக் கொண்டிருக்க வேண்டும். அவள் அந்த உடை போட்டிருக்க கூடாது - இல்லை அது அவளது உரிமை.  அந்த நேரத்தில் அங்கு சென்றிருக்கக் கூடாது - குற்றவாளிகள் மட்டும் செல்லலாமா?  அந்த பொண்ணு NO சொல்லி இருக்கனும் - அந்த பொண்ணு YES சொல்லவில்லை. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது திருத்தணி அருகே ரயிலில் வடமாநில தொழிலாளி ஒருவரை நான்கு சிறார்கள் அரிவாளால் தாக்க...

ஆண்களின் ஆயுதம்

சொந்த மக்களோட உடல் குண்டுகளால துளைக்கப்பட்டுட்டு இருக்கு. பட்டினியால கொத்துக் கொத்தா பிஞ்சு குழந்தைகள்ல இருந்து எல்லாரும் செத்து மடியுறாங்க. எஞ்சி இருக்கவுங்க கண்ணு முன்னாடியே தன்னோட இனம் அழியுறத பாத்து கதறிட்டு இருக்காங்க. குண்டுகள் குறியில இருந்து தப்புனவங்களுக்கும் இப்ப வரைக்கும் உயிருக்கு உத்தரவாதம் இல்ல. இத்தனைக்கு மத்தியிலயும் உயிர கைல புடிச்சுகிட்டு இருக்கும் காஸா பெண்கள் ஒருவேளை உணவுக்காக பாலியல் துன்புறுத்தலுக்கு கட்டாயப்படுத்தப்படறாங்க. கொடூரத்தின் உச்சமாக சொந்த பகுதியில இருக்க ஆண்களும் இத பண்றாங்க.‌  உடைமைகளையும் சொந்தங்களையும் இழந்து உயிருள்ள பிணமாய் வாழும் பெண்களிடம் கூட ஆண்கள் பயன்படுத்தும் பேராயுதம் "ஆண்குறி". 

மொழியின் ஓவியம்

எனக்குப் பிறகு நான் அதிகம் நம்புவது இந்த ஓவியங்கள்(எழுத்து) தான். என்னை பக்குவப்படுத்தியது, பக்குவப்படுத்திக் கொண்டிருப்பது யாரோ ஒருவரினுடைய எழுத்து.  எத்தனைக்குப் பிறகும் என்னை உயிர்ப்புடன் மீண்டெழச்செய்யும் வல்லமை படைத்தது.   நான் வாசிக்கும் ஓவியத்தில் அன்றாடம் என்னைத் தேடும் வழக்கம் உடையவள் நான். அது என்னை சிரிக்க வைக்கும். அழ வைக்கும். அழுத கண்களை ஆற்றுப்படுத்தும். சிந்திக்கத் தூண்டும். காதலிக்க கற்றுக்கொடுக்கும். வெட்கமூட்டும். இவ்வாழ்வின் மீதான தேடலை அதிகரிக்கும். வலி நிறைந்த எழுத்துக்கள் என் காயங்களை சற்று ஆறச்செய்யும். கடந்து வந்த காயத்தின் தழும்புகளில் மீண்டும் அரிப்பூட்டச்செய்யும்.  இனம், மொழி தெரியாத மனிதர்களை நெருங்கிய உறவாக மாற்றும். அன்றாடம் சலித்த சமயத்தில் பரிட்சயமில்லா உலகில் உலவவிடும். அவ்வுலகிலும் கண்ணீருக்கு இடமிருக்கும்.  எனக்கான ஆகப்பெரும் ஆறுதல் என் எழுத்துகள். என் எழுத்துகள் என் பேச்சை மட்டும் தான் கேட்கும். என் சிந்தனைக்கு அப்பாற்பட்டு மயிரிழையும் யோசிக்காது. இதைவிட வேறென்ன காரணம் வேண்டும் இதை இவ்வளவு நேசிக்க.  என் எண்ணங்களுக்கு உயி...